ஆசிரியர் பயிற்சி நெறி
திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் கல்வி பிரிவு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மூன்று நாள் வதிவிட பயிற்சி நெறி ஒன்றினை நடத்தியுள்ளனர்.
- கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த அப்பயிற்சி நெறி செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடைந்தது. இதில் 85 முன்பள்ளி ஆசிரியர்கள் பங்கு கொண்டனர்.கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள மு;பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் நெ.மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இவ் ஆசிரியர்களுக்கு வேண்டிய பயிற்சிகளை வழங்கி வைத்தனர்.
ஏகெட் நிறுவனம் திருக்கோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, தம்பலகாமம், மூதூர், குச்சவெளி, பட்டணமும் சூழலும் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 60 முன்பள்ளி பாடசாலைகளை நிர்வகித்து வருகின்றது. இங்கு 102 ஆசிரியர்கள் சேவையாற்றி வருகின்றனர்.
சோதனைச் சாவடிகள் நீக்கம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் மெல்ல மெல்ல அகற்றப்படுகின்றன. மேலும் வாசிக்க »
கிரிக்கட் போட்டி 20 – 20
திருக்கோணமலை மாவட் கிரிக்கட் சங்கம் நடத்திய இருபதுக்கு -20 கிரிக்கட் போட்டியில் நோமன்ஸ் கழகம் சம்பியனானது. இரண்டாம் இடத்தினை இறக்ககண்டி அல்-ஹம்றா விளையாட்டுக் கழகம் தனதாக்கிக் கொண்டது.
தொழில் பயிற்சி
பொதுச் சந்தை திறப்பு
திருக்கோணமலை 140 மில்லியன் ரூபாய்கள் செலவில் அமைக்கப்பட்ட புதிய சந்தை கட்டிட தொகுதி இன்று 09.05.2008 காலை திறந்து வைக்கப்பட்டது. மேலும் வாசிக்க »
கிழக்கு மாகாண தேர்தல்
கிழக்கு மாகாண சபையின் முதலாவது தேர்தல் நாளை 10.05.2008 நடைபெறுகின்றது.
சிறைச்சாலையில் விளையாட்டுப் போட்டி
திருக்கோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் புதுவருட விளையாட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடத்ப்பட்டது. காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை இந் நிகழ்வு நடத்தப்பட்டது. மேலும் வாசிக்க »
ஸ்தாபகர் தினம்
திருக்கோணமலை சண்முகா இந்து மகளீர் கல்லூரி ஸ்தாபகர் தினம் இன்று வெள்ளிக்கிழமை (02.05.2008) விமர்சையாக அனுஸ்டிக்கப்பட்டது. அதிபர் திருமதி சந்திரா பாலசுப்பிரமணியம் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.



