மூக்கு கண்ணாடி விநியோகம்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருக்கோணமலை கிளையின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (27.04.2008) காலை 10.30 மணிக்கு திருக்கோணமலை சௌபாக்கியா மண்டபத்தில் வைத்து இக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது.
செஞ்சிலுவைச் சங்கத்தின் திருக்கோணமலை கிளையின் தலைவர் டாக்கடர்.ஈ.ஜி.ஞானகுணாளன் இவற்றினை வழங்கி வைத்தார். திருக்கோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், அர்களின் குடும்ப உறுப்பினர்கள் என 30 பேருக்கு இக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
