வாழ்வாதார உதவிகள்
சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பின் திருக்கோணமலை அலுவலகத்தினால் இந்தியாவில் இருந்து திரும்பியவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. 2006 ஆண்டு காலப்பகுதியில் இருந்து தாயகத்திற்கு திரும்பியவர்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்படுகின்றது. ஆயிரம் பேருக்கு இவ்வாறு சுயதொழில் புரிவதற்கு உதவிகள் வழங்கப்படவுள்ளது.
இதன் முதல் கட்டமாக இன்று புதன்கிழமை 23.04.2008 காலை அலுவலகத்தில் வைத்து 88 பேருக்கு தலா 30,000 ரூபாய்கள் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது. திருக்கோணமலை பட்டணமும் சூழலும், குச்சவெளி, கிண்ணியா, ஈச்சிலம்பற்று, தம்பலகாமம், மூதூர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த தாயகம் திரும்பியவர்களுக்கு இவைகள் வழங்கப்பட்டது.
தையல் இயந்திரம் 17 பேருக்கு தையல் இயந்திரங்களும், 58 பேருக்கு மீன்பிடி உபகரணங்;கள், குளிர்பான வியாபாரம் 10, சிறிய கடை 01,சிகை அலங்காரம் 01, கல் அரிதல் தொழில் 01, என இவ் உதவிகள் வழங்கப்பட்டது.
ஐக்கியநாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் திட்ட உத்தியோகத்தர் க.யோகராசா அவர்கள் , புலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் (IOM) திருக்கோணமலை உப அலுவலகத்தின் மேலாளர் ஜே.ஏ.ஜீவானந்தம் அவர்களின் அழைப்பின் பேரில் இவற்றினை வழங்கி வைத்தார்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
