தேர்தல் போட்டி
கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது மாகாண சபை தேர்தலில் திருக்கோணமலை மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளும் 11 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்த 4 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மாகாணசபை தேர்தல்
கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது மாகாண சபை தேர்தல் வைகாசி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்த ஈழமக்கள் ஜனநாயக கட்சி, மற்றும் ஜனநாயக தேசிய கூட்டணி, தமிழ் ஜனநாயக கூட்டணி, முஸ்லிம் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் உதவி தேர்தல் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டள்ளது.
சட்டத்தரணி ந.வரதன், ஊடகவியலாளர் அ.பரசுராமன் இருவரும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பிலும், வைத்தியகலாநிதி கு.ஹேமசந்திரா சுதந்திர கூட்டமைப்பு சார்பிலும் இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
