பாலர் விளையாட்டு விழா
திருக்கோணமலை கலைமகள் மொண்டிசூரி பாடசாலையின் விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (30.03.2008) மதியம் 2.00 மணிக்கு மெக்கெய்சர் மைதானத்தில் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
அன்புவளி ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் புதன்கிழமை 09.04.2008 அன்று நடைபெறவுள்ளது. இவ் ஆலயத்தின் கும்பாபிஷேக திருப்பணிக்கு நிதி உதவி தேவைப்படு கின்றது. அன்பளிப்புக்களை வழங்க விரும்புவோர் திருக்கோணமலை ஹட்டன் தேசிய வங்கியில் கணக்கு இலக்கம் 31 000 26333 8012 இல் வைப்புச் செய்யுமாறு ஆலய பரிபாலன சபையினரால் வேண்டப்படு கின்றனர்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
டொறிக்கு Birthday
மூதூர் சகாயபுரத்தை சேர்நத டொரிங்டன் பாய்வா இன்று வியாழக்கிழமை (27.03.2008) தனது 28வது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றார்.
இவர் பல பேறுகள் பெற்று பல்லாண்டு வாழ கதிரவன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
தொழில் யோசனைப் பயிற்சி
எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் வாழ்வாதார பிரிவு பெண்களுக்கு சந்தைப்படுத்தல் சம்பந்தமான பயிற்சிகளை வழங்கியது. 4 தினங்கள் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சியாளர்களது உற்பத்தி பொருட்களின் மாதிரி சந்தை பற்றிய காட்சிப்படுத்தல் புதன்கிழமை 26.03.2008 காலை 10.00 மணிக்கு சமூக சேவைகள் நிலைய மண்டபத்தில் நடத்தப்பட்டது.
90 வீடுகள் கையளிப்பு
ஈச்சிலம்பற்று சூரநகர் என்னும் இடத்தில் கடல் அனர்த்தத்தால் பாதிக்க்படடவரகளுக்கு 90 நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. கோட் எயிட் நிறுவனத்தின் நிதிஉதவியுடன் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட இவ்வீடுகளை கையளிக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை 19.03.2008 நடைபெற்றது.


