சுஜாதா காலமானார்
தென்னிந்திய எழுத்தாளர் சுஜாதா இன்று வியாழக்கிழமை 28.02.2008 காலை காலமானார். இலக்கிய முன்னோடியாக விளங்கிய அன்னாரது மறைவுக்கு கதிரவன் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தமிழ் மொழி தின போட்டி 2007
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாமாண மட்ட தமிழ் தின மொழி போட்டிகள் எதிர்வரும் முதலாம் திகதி 01.03.2008 திருக்கோணமலையில் நடைபெறுகின்றது. இதில் திருக்கோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு கொள்கின்றனர்.
பொது கட்டிடங்கள் அமைப்பு
திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர விடுகளை அமைத்துக் கொடுத்து அவர்களை மீள குடியமர்த்தி வருகின்றது. இம் மக்களின் நலன் கருதி இக்கட்டடிங்களை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
உலக சாரணர் தினம் 2008
அடிக்கல் நாட்டப்பட்டது.
திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனம் குச்சவெளி வடலிக்குளம் என்னும் இடத்தில் முன்பள்ளி பாடசாலை,சனசமூகக நிலையம் ஒன்றினை இணைந்ததாக அமைத்துக் கொடுக்கவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை 25.02.2008 காலை 11.15 மணிக்கு நடைபெற்றது.
பேரூந்தில் குண்டு வெடிப்பு
கல்கிசைச் சந்திக்கு அருகில் பேரூந்தில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் மொரட்டுவவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேரூந்தில் மறைத்து வைக்கப்பட்ட பொதியினுள் மறைத்து வைக்கப்பட்ட குண்டே வெடித்துள்ளது.
கடன் தொகை அதிகரிப்பு
வடக்கு கிழக்க மாகாண கல்வித் திணைக்கள ஊழியர் நலன்புரி கூட்டுறவுச் சங்கத்தின் விசேட பொதுக் கூட்டம் நடைபெற்றது. திருக்கோணமலை நகர சபை மண்டபத்தில் காலை 11.00 மணிக்க தலைவர் எஸ்.காளிராசா தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.
சாரணர் தினம்
உலக சாரணர் தினம் நாளை 22.02.2008 வெகு சிறப்பாக அகிலமெங்கும் அனுஸ்டிக்கப்படுகின்றது. திருக்கோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு பாடசாலை சாரணர் துருப்புக்களும் இதனை அனுஸ்டிக்கின்றன.
2வது திருமலை சாரணர் குழு சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் மாலை 4.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்டுகின்றது.
வாழ்வாதார உதவிகள்
திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனம் கடல் கோளால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்கு தொடர்ந்தும் உதவி வருகின்றது. பட்டணமுமு; சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பூம்புகார், பெருந்தெரு, வீரநகர், பத்தாம் குறிச்சி, பள்ளத்தோட்டம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த தலா ஒவ்வொருவருக்கு மீன்பிடி வலைகளும், அவற்றுக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
திருக்கோணமலையில் டெங்கு
திருக்கோணமலை நகரத்தில் டெங்கு நோய் அபாயம் தோன்றியுள்ளது.இவ்வருடம் இந்நோயின் தாக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். 44 பேர் பொது வைத்தியசாலையில் தங்கியிரந்து சிகிற்சை பெற்று வருகின்றனர். 24 பேர் சிகிற்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
