நிரோசனுக்கு பிறந்த தினம்
திருக்கோணமலை மாவட்டம் தம்பலகாமம் வர்ணமேட்டை பிறப்பிடமாகக் கொண்ட கோணநாயகம் நிரோஷன் இன்று தனது 20 பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். இவருக்கு கதிரவன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றதில் மகிழ்ச்சியடைகின்றது.
மாவீரர்களுக்கு தலை வணங்குகின்றோம்.
ஈழ விடுதலைப்போரில் தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு ஒரு கணம் தலைசாய்த்து வணக்கத்தை தெரிவிக்கின்றோம். அவர்களின் தியாகத்தால் தமிழ் மக்கள் இன்று ஓரளவாவது தலை நிமிர்ந்து வாழக்கூடிய சூழ்நிலை தோன்றியுள்ளது. இவர்களது அர்ப்பணிப்பு விரைவில் தமிழ் ஈழத்தை பெற்றுத் தரும் என்று எதிர்பார்ப்போமாக.
மாவீரர்களின் குடும்பத்தினருக்கும் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இது வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு அல்ல என்பதை அறிவோம். அவர்களின் விதைகள் விருட்சமாக மாறியுள்ளது.
துக்ளக் வாரப் பத்திரிகைக்கு தமிழர்கள் தீவைப்பு
ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகத் தனது துக்ளக் பத்திரிகை யில் தொடர்ந்து எழுதிவரும் சோ ராமசாமி சிங்கள அரசால் படு கொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப் பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழச்செல்வன் குறித்து 21.11.2007 அன்று வெளிவந்த துக்கள் வார இதழில் விஷமத்தனமான தலையங்கம் எழுதியுள்ளார்.
பெற்றோல் பொதிக்குள் முகம்- கண்ணில் மிளகாய்த் தூள்- விரல் நுனியில் ஆணி- குதிக்காலில் பிரம்படி: மட்டக்களப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேர்ந்த அவலம்
சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்படும் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொள்ளும் சித்திரவதைக் கொடூரங்கள் குறித்து மட்டக்களப்பு தமிழ் அரசியல் கைதி ஜெயக்குமார் அம்பலப்படுத் தியுள்ளார்.
கருணாவை கொல்ல ஜெனீவாவில் சதித் திட்டம்: “சண்டே லீடர்” பத்திரிகை அம்பலம்
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவரான கருணாவை கொலை செய்ய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தா, “ஏசியன் ரிபியூன்” இணையத்தளத்தின் ஆசிரியர் கே.ரி.ராஜசிங்கம் ஆகியோர் சதித்திட்டம் தீட்டியதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் வார இதழ் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.11.07) வெளிவந்த “சண்டே லீடர்” வார இதழில் இது தொடர்பாக சோனாலி சமரசிங்க எழுதியுள்ள விடயங்கள் இங்கு தொகுத்துத் தரப்படுகின்றது.
மேலும் வாசிக்க »
சஜித்தாவுக்கு பிறந்த தினம்
திருக்கோணமலைய சசிகுமார் நேசமலர் தம்பதிகளின் கினஷ்ட புதல்வி சஜித்தா இன்று 15.11.2007 தனது 5வது பிறந்த தினத்தை கொண்டாடு கின்றார். இவர் பல்கலையும் பெற்று பல்லாண்டு வாழ்கவென கதிரவன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
கலைமகள் மொண்டிசூரி பாடசாலையின் மாணவியான இவர் அடுத்த வருடம் தனது பாடசாலை கல்விக்காக திருக்கோணமலை சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் இணைந்துள்ளார்.
நிபந்தனையின்றி வைகோ,பழ.நெடுமாறன் விடுதலை செய்யப்பட வேண்டும்.
இரங்கல் ஊர்வலம் நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்ட அனைவரையும் நிபந்தனை ஏது மின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் விளையாட்டுப்போட்டி
இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருக்கும் புலம் பெயர்ந்தோர் மத்தியில் விளையாட்டுப் போட்டி ஒன்று நடத்தப் பட்டது. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இப்போட்டிகள் நடத் தப்பட்டது. ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம், தமிழ்நாடு மறுவாழ்வுத் துறை அமைச்சு என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
சென்னையில் தமிழின உணர்வாளர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க »
