இலங்கையில் சமூக இணக்கத்துக்கு உலக வங்கியின் ஆலோசனை
கல்வித்துறையை ஆராய்ந்து அத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் களும் பிள்ளைகளின் உளநிலையை ஆராயும் உளவியலாளர்களும் கல்வியின் நோக்கங்களைப் பற்றி பேசும்போது பிள்ளைகளின் பல் வகைப்பட்ட விருத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். இவ்விருத்தியானது அறிவு விருத்தி, மனவெழுச்சி விருத்தி, சமூக விருத்தி, உடல் விருத்தி என்பவற்றை உள்ளடக்கும். இச்சகல விருத்திகளையும் ஏற்படுத்துவதாக பாடசாலைக்கல்வி அமைதல் வேண்டும். அத்தகைய பிள்ளைதான் வாழப்போகும் சமூகத்தில் இசைந்து வாழ்ந்து கொள்வான். அவன் நல்ல பிரஜையாகவும் எத்தகைய பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக்கூடியவனாகவும் கல்வியினால் உருவாக்கப்படுகின்றான் என்பது இவ்ஆய்வாளர் கருத்து.
