அம்மை தழும்புகள் நீங்க…
அம்மை தாக்கியவர்களுக்கு முகத்தில் தழும்புகள் நிரந்தமாகிவிடும். இந்த தழும்புகளை நீக்கி, முகத்தை பளபளப்பாக்க இதோ ஒரு எளிமையான டிப்ஸ்:
ஆயுதங்களை விற்க செக் குடியரசு தயார்.
இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தில் இராணுவத்தின ருக்குத் தேவையான ஆயுதங்களை வழங் குவதற்கு செக் குடியரசு முன்வந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிநவீன ராடார்கள் உட்பட இராணுவத்துக்குத் தேவை யான ஆயுதங்கள் தளபாடங்களை இலங்கை அரசுக்கு வழங்க தமது அரசாங்கம் முன்வந்திருப்பதாக இலங்கைக் கான செக் குடியரசின் தூதுவர் ஹைனெக் கிமோனெக் தெரிவித்திருக்கின்றார்.
கண்காணிப்புக் குழுவை வெளியேற்றுங்கள் _ தேசிய பிக்கு முன்னணி
யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ராஜதந்திர அந்தஸ்தை ரத்துச் செய்து . அவர்களை வெளி யேற்றி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிய வேண்டும். இதனை வலியுறுத்தி தேசிய பிக்கு முன்னணி பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அவசரக் கடித மொன்றை ஞாயிற்றுக்கிழமை 07.10.2007 அனுப்பி வைத்துள்ளது.
இக்பால் அத்தாஸ் இழிவு ஊடகவியலாளர் ஒன்றியம் கடும் கண்டனம்.
ஊடகவியளாலர் இக்பால் அத்தாசை இழிவுபடுத்தி வெளியான அரசாங்கத்தரப்புக் கருததுக்களுக்கு சுதந்திர ஊடகவியளாலர் இயக்கம் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டள்ளது.
அத்தோடு இராணுவப் பேச்சாளர் கருத்து வெளியிட்டிருப் பதற்கும் சுதந்திர ஊடக இயக்கம் தனது வன்மையான கண்ட னத்தை தெரிவித்துள்ளது.
வெலக்கடை சிறையில், தமிழ் அரசியல் கைதிகளை ஐ.நா பிரதிநிதி சந்தித்தார்.
ஐ.நாவின் சித்திரவதைகள் தொடர்பான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஞாயிற்றுக்கிழமை 07.10.2007 வெலிக்கடைச் சிறைச் சாலை சென்று அங்கு தடுத்து வைக்ப்பட்டுள்ள 86 தமிழ் அரசியல் கைதிளையும் பார்வையிட்டார். தம்மைச் சந்தித்து பிரதிநிதியிடம் தமது நிலைகளை முழுமையாக ஏடுத்துக் கூற முடியவில்லை என கைதிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க »
பயங்கரவாத்தை அகற்ற ஒரு வருடகால அவகாசம்
நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டால் மாத்திரமே தேசிய ஒருமைப்பாட்டை நிலைநாட்ட முடியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். நேற்று 07.10.2007 ஞாயிற்றுக்கிழமை பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

