மலேரியா நோய் தாக்கினால்…
மலேரியா நோய் தாக்கினால் காய்ச்சல் தொடர்ச்சியாக இருக்காது; விட்டு விட்டு வரும்.
இணக்கம் ஏற்படாவிட்டால் சர்வகட்சி குழு கலைப்பு
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவால் தீர்வுத் திட்டத்துக்கான இணக்கப்பாடு காணப்படாவிடில் சர்வகட்சி குழுவை கலைத்துவிட்டு மாற்று வழியொன்றின் மூலம் அரசியல் தீர்வுத் திட்டத்தைக் கொண்டு வரும் முயற்சிகள் முன்னெடுக்கப்படலாமெனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் கட்சிகளுக்கிடையே இணைக்கப்பாட்டை எட்டுவதில் அரசு தொடர்ந்தும் முனைப்புக் காட்டி வருவதாகவும் அரசியல் தீர்வை எட்டுவதிலிருந்து அரசு ஒரு போதும் விலகிச் செல்லாது எனவும் அறிவித்துள்ளது.
தணிக்கை சபையை ஏற்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை
இராணுவ நடவடிக்கை மற்றும் ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பான செய்திகளுக்கு தடைவிதிக்க தணிக்கை சபையை ஏற்படுத்தும் எண்ணம் அரசுக்கு அறவே கிடையாதெனவும் அவசர காலச் சட்டமும், பயங்கரவாதத் தடைச் சட்டமும் இருக்கும் நிலையில் தணிக்கை சபை அவசியமே இல்லையெனவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சேவையில் பதவி உயர்வு வழங்க உள்ளீர்ப்பின் சம்பள அளவுக்கு புள்ளி வழங்கும் நடைமுறையை கல்வி அமைச்சு அமுலாக்கம்
இலங்கை ஆசிரியர் சேவையில் பதவி உயர்வு வழங்க சேவையின் கால அளவிற்கு புள்ளிவழங்குவது போல், உள்ளீர்ப்பின் சம்பள அளவிற்குப் புள்ளி வழங்கும் நடைமுறையை கல்வி அமைச்சு அமுலுக்குக் கொண்டுவந்துள்ளது.
கிளிவெட்டியில் இரு தமிழர்கள் காணாமல் போயுள்ளனர்
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு கிளிவெட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரிநிலையங்களில் தற்காலிகமாக வசித்து வந்த இருவரைக் காணவில்லை எனத்தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பhக மூதூர் பொலிஸ் நிலையத்தில் இவர்களது உறவினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பலவந்தமான மீள்குடியமர்வை அரசு நிறுத்த வேண்டும்.
பாதுகாப்பற்ற பகுதிகளில் மக்களை மீளகுடியமர்த்துவதனை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று உள்ளுரில் இடம்பெயர்ந்தோர் கண்காணிப்பு மையம் IDMC வலியுறுத்தியுள்ளது.
புல்மோட்டை மோதல்: 3 டோறா சேதம்
திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் 17 டோறாப் படகுகளைக் கொண்ட பெரும் அணிமீது கடற்புலிகள் நடத்திய தீவிர தாக்குதலில் சிறிலங்கா கடற்படையினரின் இரு டோறாப் படகுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் ஒரு டோறாப் படகு சேதமடைந்துள்ளது.
கொக்கிளாய் – புல்மோட்டை கடற்பரப்பில் நேற்று வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு தொடங்கிய இம் மோதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.20 மணிவரை இடம்பெற்றது.


