உலகெங்கும் பாராட்டப்படும் ஜப்பானிய கல்வி ஏற்பாடுகள் -பேராசிரியர் சோ.சந்திரசேகரம்-
ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை ஜப்பானில் இல்லை. இவ்வாறு மாணவர்களைப் பிரித்து வைத்துக் (Ability groupng) கற்பிப்பது பல உலகநாடுகளில் பின்பற்றப்படும் ஒரு ஏற்பாடு. மேலைநாடுகள் இதனைப் பெரிதும் விரும்பித் தமது நாடுகளில் தற்போது அறிமுகம் செய்து வருகின்றன.
மூதூர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரின் சகோதரர் படுகொலையை கண்டித்து தீர்மானம்
மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.சௌந்தரராஜனின் சகோதரரான கிராம சேவையாளரும் எழுத்தாளருமான பரஞ்சோதியின் படுகொலையைக் கண்டித்து பிரதேச சபைக்கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க »
`சமஷ்டி’ தொடர்பான ஐ.தே.க.வின் குத்துக்கரணம் தமிழர் போராட்டம் முனைப்படைய வழிவகுக்கும்
இன நெருக்கடிக்கு சமஷ்டி முறையிலான தீர்வை நிராகரிக்கும் விதத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.கருத்துகளை வெளியிட்டு வருகின்றமை `அரசியல் இலாபம்’ பெறுவதற்கான முயற்சியென சாடியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையிலுள்ள பெரிய கட்சிகளின் இத்தகைய குத்துக்கரணங்கள் தமிழ் மக்களின் போராட்டத்தை மேலும் முனைப்படையச் செய்ய வழிவகுக்குமெனக் கூறியுள்ளது.
ஒற்றையாட்சியின் கீழ் ஒரு தீர்வு தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக அமையாது. ஆனந்தசங்கரி
சமஷ்டி கோட்பாடு உட்பட பல்வேறு விடயங்களில் புதிய நிலைப்பாட்டை எடுக்க ஐக்கிய தேசிய கட்சி எடுத்திருக்கும் முடிவு எனக்கு அதிர்ச்சியை தருகிறது. இதை நான் வன்மையாக ஆட்சேபித்து சமஷடி கோட்பாட்டை கைவிட வேண்டாமென ஐக்கிய தேசிய கட்சி தலைமையை வேண்டுகிறேன்.
நெல்சன் இலக்கமும் ஆட்டமிழப்பும்
கடந்த இரு வாரங்களாக இடம் பெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மிகத்துரிதமாக நடைபெற்று முடிந்து, வெற்றியணியும் தேர்வு செய்தாகிவிட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெற்ற இறுதிப் போட்டி மொத்த போட்டியினதும் சூட்டை இரசிகர்களுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் வழங்கியதெனலாம்.
