தமிழகம் நோக்கி மீண்டும் அகதிகள்.
சிறீலங்காப் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் மீண்டும் இந்தியாவுக்கு பயணமாகின்றனர். மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றுவரும் மோதல் சம்பவங்களைத் தொடர்ந்து பல குடும்பங்கள் பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
முருகேசு சுவாமிகள் மகாசமாதியடைந்தார்.
காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகள் சென்னையில் மகா சமாதியடைந்தார். நேற்று திங்கட்கிழமை 24.09.2007 மாலை 4 மணியளவில் மகா சமாதியடைந்த ஆர்.கே. முருகேசு சுவாமிகளின் பூதவுடல் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு நுவரேலியா, கல்லடி, தம்பிலுவில் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
சுவாமிகளின் மகாசமாதியடையச் செய்யும் நிகழ்வுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். நுவரெலியா லங்கா தீஸ்வரர் ஆலயம், கல்லடி காய்த்திரி ஆலயம் என்பவற்றை நிறுவி இவர் இறைபணி செய்து வந்தார்.
Murugesu Swamigal
கனடாவில் விநாயகர் சிலை அவமதிப்பு
கனடாவில் கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை, நிர்வாணமாக வைக்கப்பட்டிருந்ததால் இந்துக்களின் கடுமையான எதிர்ப்பையடுத்து அங்கிருந்து அகற்றப்பட்டது.
மைக்ரோ சர்ஜரி
அறுவை சிகிச்சைகள் பலவிதம் உண்டு. நோயின் தன்மை, அது தாக்கியுள்ள உடல் உறுப்பு ஆகியவற்றை பொருத்து அறுவை சிகிச்சைகள் மாறுபடும்.
தற்போது மைக்ரோ சர்ஜரி (Micro Surgery) முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதுகுறித்து போதிய விளக்கம் கிடைக்காததால் பலரும் மைக்ரோ அறுவை சிகிச்சை பற்றி ஒருவித குழப்பநிலையிலேயே உள்ளனர்.
இந்தியா-பிரிட்டன் கூட்டு ராணுவ பயிற்சி
காஷ்மீரில் நடைபெற்றுவரும் இந்தியா – இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கும் ராணுவக் கூட்டுப் பயிற்சிக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் இறைமை அடிப்படையில் சமாதான பேச்சு இடம்பெறவேண்டும்
தமிழ் மக்களின் இறைமை அடிப்படையில் தமிழ் மக்களின் சமாதான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்குமாறு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
