பழ.நெடுமாறன் அவர்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
நெடுமாறனின் காலவரையறையற்ற தியாக உண்ணாவிரத போராட்டம்இ இலக்கு நிறைவேறிய நிலையில் இன்று சனிக்கிழமை மாலை 3.15 மணிக்கு முடிவுக்கு வந்தது.
கிளாலியில் படையினரின் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு
கிளாலிப் பகுதியில் இருந்து சிறிலங்காப் படையினர் இன்று பாரிய அளவில் பலமுனைத் தாக்குதல்களை நடத்தியவாறு மேற்கொண்ட பாரிய முன்நகர்வு முயற்சியினை தமிழீழ விடுதலைப் புலிகள் முடியடித்துள்ளனர்.செறிவான ஆட்லறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்த பாரிய முன்நகர்வு முயற்சியினை சிறிலங்காப் படையினர் மேற்கொண்டனர்.
Kilali frontline attack
பழ.நெடுமாறன் அவர்களின் போராட்டம் தொடர்கிறது
தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பழ.நெடுமாறன் அய்யா அவர்களை உண்ணாநிலை போராட்டத்தை கைவிடகோரி எழுதிய கடித்திற்கு பதில்கடிதம் எழுதிய அய்யா அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை கைவிடமறுத்துள்ளதாக தெரியவருகிறது.
