பீரங்கிப் படகுகள் மூலம் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல முற்பட்ட புதுக்கோட்டை பாவாணர் கைது
புதுக்கோட்டை பாவாணர் தலைமையிலான தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் இராமேஸ்வரத்தில் நிலைகொண்ட இந்திக் கடற்படையினரின் பீரங்கிப் படகுகளை கைப்பற்றி அவர்களின் பீரங்கிப் படகுகளில் யாழ் குடாநாட்டுக்கு உணவுகளையும் மருத்துப் பொருட்களையும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியக் கடற்படையினரின் பீரங்கிப் படகுகளில் இருந்த இந்தியத் தேசியக் கொடியினை இறக்கி தங்கது கொடியை புதுக்கோட்டை பாவாணர் தலைமையினான ஆதரவாளர்கள் ஏற்றினர்.
இதனால் கடற்படையினருக்கும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து புதுக்கோட்டை பாவாணர் தலைமையில் பீரங்கிப் படகுகளைக் கைப்பற்றச் சென்ற தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
