பாராட்டு நிகழ்வு
திருக்கோணமலை ஏ.சி.ஏ கல்வி நிறுவகத்தில் கல்வி பயின்று இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சித்தி பெற்ற மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தெடிஸ்த பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு திருக்கோணமலை வலயக் கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் பிரதம விருந்தினராகக்ககலந்து கொண்டார். மெதடிஸ்த பெண்கள் கல்லூரி அதிபர் திருமதி ரோகினி ஜோதிநாதன் கௌரவ விருந்தினராகவும், கல்வி நிறுவகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.பகீதரன், நிர்வாகப் பணிப்பாளர் வி.ஜெகதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
கல்வி நிறுவகத்தில் இருந்து தோற்றிய 50 மாணவர்களில் 22 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேலாக பெற்றுள்ளதோடு, 23 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.


ரசித்த சில காட்சிகள்
இறக்ககண்டி புதிய பாலமும். பழைய பாலமும்.
Gillwell Reunion
Gll well reunion was held on 7th at Trincomalee R.K.M.Sri Koneswara Hindu College. 192 Wood Badge scout leaders were participate this event. Trincomalee District Branch was organized under the National Scout Head Quarters instructions.

சாரணர் தலைவர் சின்னம் சூட்டல்
திருக்கோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தினால் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான சாரணீய பயிற்சி அவத்தை 1இல் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேலும் வாசிக்க »
சாரணர் தலைவர்கள் ஒன்றுகூடல்
இலங்கை சாரணர் சங்கத்தல் தரு சின்னம் பெற்ற சாரணர் தலைவர்களுக்கான ஒன்றுகூடல் (Gillwel Reunion) இவ்வருடம் திருக்கோணமலையில் நடைபெறுகின்றது. மேலும் வாசிக்க »
30 வருடம் நிறைவில் எகெட் கரித்தாஸ்
திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் 30 வருட நிறைவு விழா இன்று நடைபெற்றது. புனித மரியாள் கல்லூரி திரேசா கலையரங்கில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி யோசெப் பிற்றேரி பிரதம விருந்தினராகவுக் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண தமிழ்த் தின விழா
பாடசாலைகளுக்கு இடையிலான தமிழ்த் தின விழா போட்டியில் இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டம் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. மேலும் வாசிக்க »
கும்பாபிசேகம்
கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் அமையப்பெற்றுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் வெள்ளிக்கிழமை (30.10.2009) காலை 6.30 மணிக்கு நடைபெறுகின்றது. இன்று வியாழக்கிழமை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
ஆசிரியர் தின விழா
திருக்கோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களை பாராட்டும் நிகழ்வு (சர்வதேச ஆசிரியர் தின விழா) திங்களன்று 26.10.2009 மாலைகல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் இடம்பெற்றது.




